சாதி சான்றிதழ் சரிபார்ப்பு என்ற பெயரில், மகாராஷ்டிரா மாநிலத்தில், பணியில் உள்ள / பணி ஓய்வு பெற்ற ST ஊழியர்களை, கடந்த சில ஆண்டுகளாக, BSNL நிர்வாகம் துன்புறுத்தி வருகிறது. இது தொடர்பான DoPT அறிவுறுத்தல்கள் மற்றும் DoT உத்தரவுகள் அனைத்தும், BSNL நிர்வாகத்தால் மீறப்படுகிறது. DoTயின் உத்தரவுகளை மீறி, ST ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக, ST சமுதாயத்தை சார்ந்த பல ஓய்வூதியர்கள், கடுமையான துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த பிரச்சனையை முன்னிறுத்தி, BSNLன் உயர் மட்ட நிர்வாகத்திற்கு, தொடர்ச்சியாக பல கடிதங்களை, BSNL ஊழியர் சங்கம் எழுதி வருகிறது. மகாராஷ்டிரா மாநில நிர்வாகம் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
இதற்கு எதிராக, AIBDPA மத்திய சங்கம் , 02.06.2025 அன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தது. AIBDPA சங்கத்தோடு இணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த, BSNLEU மத்திய சங்கமும் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன் அடிப்படையில், நமது சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக, 02.06.2025 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், CoC சார்பாக, GM அலுவலகத்தில், எழுச்சியுடன் நடைபெற்றது.