வவுச்சர்களுடன் கூடிய வெளி நோயாளி சிகிச்சைக்கான உச்ச வரம்பை, 2020, ஏப்ரல் மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில், 15 நாட்கள் ஊதியம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின், மருந்துகளின் விலை மற்றும் இதர செலவுகள், பல மடங்கு அதிகரித்து உள்ளன. இந்த உச்ச வரம்பை காலத்திற்கு ஏற்ற முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், நிர்வாகம் , அதனை ஏற்றுக் கொள்ள வில்லை.
இந்த உச்ச வரம்பை, 01.04.2025ல் வாங்கும் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில், 15 நாட்கள் ஊதியம் என மாற்றி அமைக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், 27.05.2025 அன்று, CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வாங்கும் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில், மாற்றப் பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. அத்துடன், வெளி நோயாளி சிகிச்சைக்கான உச்ச வரம்பை, துவக்கத்தில் இருந்ததை போல, 23 நாட்கள் என மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்