மொபைல் தொலைபேசி வாங்குவதற்கான பணத்தை, அதிகாரிகளுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. விற்பனை மற்றும் வியாபாரத்தை மேம்படுத்தவும், மற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவும், NON EXECUTIVE ஊழியர்களும் தங்களின் சொந்த மொபைல் தொலைபேசிகளை வலுவாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மொபைல் தொலைபேசி வாங்கியதற்கான பணத்தை, NON EXECUTIVE ஊழியர்களுக்கும் திரும்ப வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது.
இந்தப் பிரச்சினையை, 08.05.2024 அன்று, CMD BSNLக்கு எழுதிய கடிதம் மூலம், BSNL ஊழியர் சங்கம் எழுப்பியது. அதன் பின், 19.11.2024 மற்றும் 24.04.2025 ஆகிய இரண்டு தினங்களில், DIRECTOR (HR)க்கும் கடிதங்கள் எழுதியது. எனினும், மொபைல் தொலைபேசி வாங்கியதற்கான பணத்தை, NON EXECUTIVE ஊழியர்களுக்கு திரும்ப வழங்க இயலாது என நிர்வாகம் கூறிவிட்டது. சமீபத்தில், JTO வரையிலான அதிகாரிகளுக்கு லேப்டாப் வழங்க நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளுக்கு வழங்கும் எந்த ஒரு வசதிக்கும் எதிராக, BSNL ஊழியர் சங்கம் நிற்காது. ஆனால், மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நிர்வாகம், NON EXECUTIVE ஊழியர்களை நடத்தக்கூடாது.
10.06.2025 அன்று CMD BSNLக்கு எழுதிய கடிதத்தில், இந்த பிரச்சனையை வலுவாக எழுப்பி உள்ள BSNL ஊழியர் சங்கம், மொபைல் தொலைபேசி வாங்கியதற்கான பணத்தை, NON EXECUTIVE ஊழியர்களுக்கும் திரும்ப வழங்க வேண்டும் என கோரி உள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்