ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகள், இணைந்த குழுவில் நடைபெற்று வருகின்றன. சாதாரணமாக ஊதிய மாற்ற குழு, ஊதிய மாற்றம் தொடர்பான முடிவுகளை மட்டுமே எடுக்காது. அலவன்ஸ்கள் மாற்றம் தொடர்பாகவும், முடிவுகளை எடுக்கும். இந்தச் சூழ்நிலையில், அலவன்ஸ்கள் மாற்றம் தொடர்பாக, அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை, நிர்வாகம் அமைத்துள்ளது. இவ்வாறு, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில், பல்வேறு அலவன்ஸ்களின் அளவு தொடர்பாக, விவாதிக்கும் உரிமையை, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்களிடம் இருந்து பறிக்கப் பட்டு விட்டது. அலவன்ஸ்கள் மாற்றத்திற்கான குழுவில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்து 11.06.2025 அன்று, BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (HR)க்கு கடிதம் எழுதி உள்ளது.
10.06.2025 அன்று, திரு S.P. சிங் PGM (Estt) அவர்களை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு நேரில் சந்தித்து, அலவன்ஸ்கள் மாற்றத்திற்கான குழுவில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும் என வலிமையாக கோரிக்கை வைத்தார். இன்று DIRECTOR (HR)க்கு கடிதமும் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்