Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 12, 2025

தேக்க நிலை - போராட்டம் தவிர்க்க முடியாத நிலை


ஊதிய தேக்க நிலை எனும் கடுமையான பிரச்சனை காரணமாக, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சிரமப் படுகின்றனர். எனவே, மேலும் கால தாமதமின்றி தீர்வு காண BSNL ஊழியர் சங்கம் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில் உள்ள நிர்வாக தரப்பு உறுப்பினர்கள், ஒத்துழைக்க மறுக்கின்றனர். கடந்த 6 மாத காலத்தில் ஒரே ஒரு முறை தான் ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்திலும், நிர்வாக தரப்பு உறுப்பினர்கள், எந்த ஒரு தயாரிப்பும் இல்லாமல் கூட்டத்திற்கு வந்ததால், எந்த ஒரு உருப்படியான விவாதமும் நடைபெறவில்லை. 

நிர்வாக தரப்பு உறுப்பினர்களில் பலர், குழுவிற்கு புதியவர்கள் என்று கூறப்பட்டது. எனவே, நிர்வாக தரப்பின் புதிய உறுப்பினர்களுக்கு, கடந்த காலத்தில் நடைபெற்றவைகள் குறித்து, அனைத்து விதமான ஆவணங்களையும் இணைத்து,  BSNL ஊழியர் சங்கம், ஒரு விரிவான குறிப்பையும் வழங்கியது. 29.04.2025 அன்று நடைபெற்ற கடைசி கூட்டத்தில், மே மாத இறுதி வாரத்தில், ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் அடுத்த கூட்டம் நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.  ஜூன் மாதம் முதல் வாரத்தில் கூட்டம் நடைபெறும் என, அந்த குழுவின் தலைவர், மீண்டும் உறுதி அளித்தார்.  மீண்டும், அது நடைபெறவில்லை. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவரை நேரடியாக சந்தித்து, இந்த பிரச்சனை தொடர்பாக விவாதித்தார். ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை, எந்த அறிவிப்பும் வெளியிடப் படவில்லை. 

இந்த சூழ்நிலையில், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில் உள்ள நிர்வாக தரப்பு உறுப்பினர்களின் ஒத்துழையாமை சுட்டிக் காட்டி, BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (HR)க்கு, 10.06.2025 அன்று ஒரு கடிதம் எழுதி உள்ளது. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில் தேக்க நிலை தொடர்ந்தது என்றால், போராட்ட இயக்கத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் சங்கத்திற்கு ஏற்படும் என்றும், BSNL ஊழியர் சங்கம், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.  

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU  மத்திய / மாநில சங்கங்கள்