BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர், தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு ஆகியோர், 03.06.2025 அன்று, திரு சந்தீப் கோவில் அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர்.
அ) BSNLன் 4G சேவை:-
BSNLன் 4G சேவைகளில், வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, DIRECTOR (CM) இடம் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், தரமான 4G சேவைகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள், மேலும் எடுக்கப்பட்டு வருவதாகவும், DIRECTOR (CM) பதில் அளித்தார்.
ஆ) வாடிக்கையாளர்களுக்கு E- SIM வழங்குவது:-
E-SIM இல்லை என்ற பிரச்சனை, BSNLன் உயர்மட்ட வாடிக்கையாளர்களிடம், அதிருப்தியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டது. நமது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் E-SIM வழங்குவதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வருவதாக DIRECTOR (CM) தெரிவித்தார்.
இ) AIRFIBRE சேவை வழங்குவது:-
நகர பகுதிகளில், BSNL நிறுவனமே ஏர் பைபர் வழங்குவது தொடர்பாக, BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (CM) இடம் 03.06.2025 அன்று, ஒரு கடிதம் கொடுத்தது. தற்போது, ஒரு சில கிராமப் பகுதிகளில் மட்டும், FRANCHISEEகளால் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் BSNL நிறுவனமே, ஏர் பைபர் சேவையை வழங்கினால், அது சேவையின் தரத்தை மேம்படுத்துவதோடு, BSNLன் வருவாயையும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை கவனிப்பதாக DIRECTOR (CM) உறுதி அளித்துள்ளார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்