BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், அவசர மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று (13.06.2025) மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் R. ஸ்ரீனிவாசன் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் R. ரமேஷ், மாவட்ட பொருளர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் R. ராதாகிருஷ்ணன் மாவட்ட உதவி செயலர் அனைவரையும் வரவேற்றார். BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம் துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் S. ஹரிஹரன் மாவட்ட செயலர் அறிமுக உரை வழங்கினார்.
பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முழுமையாக விவாதத்தில் பங்குபெற்றனர். கிளை செயலர்கள் விவாதத்தில் பங்குபெற்று, தங்கள் கிளையின் நன்கொடைகளை வழங்கினார்கள். மாவட்டத்திலேயே முதல் கிளையாக, சேலம் செவ்வை கிளை முழுமையாக தங்கள் கோட்டாவை பூர்த்தி செய்ததை, செயற்குழு பாராட்டியது. AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால் கூட்டத்தை வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கினார். விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. வருகிற 09.07.2025 ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை, சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற செய்வது
2. 25.06.2025 அன்று நடைபெறவுள்ள, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை, சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக நடத்துவது.
3. புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை சிறப்பாக நடத்துவது.
4. தமிழ் மாநில சங்கம் நிர்ணயித்துள்ள 11வது அகில இந்திய மாநாட்டு நிதி கோட்டாவை, இந்த மாத ஊதியம் கிடைத்தவுடன், முழுமையாக பூர்த்தி செய்வது.
5. 11வது அகில இந்திய மாநாட்டில் சார்பாளர்களாக, தோழர்கள் S. ஹரிஹரன், DS, R. ரமேஷ், DT மற்றும் பார்வையாளராக தோழர் R. ஸ்ரீனிவாசன், DP மாநாட்டில் கலந்து கொள்வது. கூடுதல் சார்பாளர் கோரிக்கையை, மாநில சங்கத்திடம் வலியுறுத்துவது.
6. சேவை குறைபாடுகள் சம்மந்தமாக, மாவட்ட நிர்வாகத்திற்கு விரிவான கடிதம் எழுதுவது, பிரச்சனை தீரவில்லை என்றால் CoC சார்பாக தள மட்ட இயக்கம் காண்பது
7. ஒப்பந்த ஊழியர் வேலை பறிப்பு, ஊதிய நிலுவை சம்மந்தமாக மாநில சங்கத்தின் மூலம் கூடுதல் அழுத்தம் கொடுப்பது
செயற்குழு கூட்டத்தில், கிளைகள் வழங்கிய 11வது அகில இந்திய மாநாட்டு நன்கொடை விவரம்
1. திருச்செங்கோடு - 4000
2. GM அலுவலகம் - 1500
3. சேலம் மெயின் - 3000
4. ஓமலூர் - 2000
5. செவ்வை - 2000
TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் P. செல்வம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.