13.01.2025 அன்று நடைபெற்ற, கடைசி தேசிய கவுன்சில் கூட்டத்தில், ஊழியர் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு கொள்கைகளுக்கு, EPP / NEPP இடையில் உள்ள பாரபட்சங்கள் நீக்கப்பட வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்திருந்ததை, நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதை போலவே, ஊழியர்களுக்கும் ஐந்தாண்டுகள் முடிந்தவுடன், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு குழு அமைக்கப்படும் என, தேசிய கவுன்சிலின் தலைவர் DIRECTOR (HR), முடிவை அறிவித்தார்.
ஆனால், நான்கரை மாத காலம் முடிந்த பின்னரும், எந்த ஒரு குழுவும் அமைக்கப் படவில்லை. இது தொடர்பாக, 17.04.2025 அன்று, BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (HR)க்கு, ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காலதாமதமின்றி அந்தக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, BSNL ஊழியர் சங்கம், DIRECTOR (HR)க்கு, 26.05.2025 அன்று, மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்