Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 24, 2025

ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு கூட்டம் 29.04.2025 அன்று நடைபெறவுள்ளது


24.04.2025 அன்று, திரு கல்யாண் சாகர் நிப்பாணி, DIRECTOR (HR)ஐ, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு சந்தித்து, கடந்த நான்கு மாத காலமாக, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழு கூட்டம் நடைபெறாத பிரச்சனையை விவாதித்தார். கடந்த ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், 19.12.2024 அன்று நடைபெற்றது என்பதை பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.  அதற்குப் பின், 10.03.2025 அன்று, அடுத்த கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக நிர்வாகம், பொதுச் செயலாளரிடம் தெரிவித்தது.  

அதற்குப் பின், BSNL ஊழியர் சங்கம், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டும் என, தொடர்ச்சியாக பலமுறை நிர்வாகத்தின் கதவுகளை தட்டியது. ஆனால், இன்று வரை அதற்கான தேதி நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறுவது அதீத காலதாமதம் ஆகி வருவதனால், ஊழியர்கள் கடுமையான கொந்தளிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என, DIRECTOR (HR)இடம் பொதுச் செயலாளர் தெரிவித்ததோடு, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டத்தை கூட்டத்திற்கான தேதியை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார். ஊதிய மாற்றக் குழுவின் அடுத்த கூட்டத்திற்கான தேதியை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, PGM (SR) அவர்களுக்கு, DIRECTOR (HR), உடனடியாக உத்தரவிட்டார். 

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, அடுத்த ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுகூட்டம், 29.04.2025 அன்று நடைபெறும் என நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. மனிதவள இயக்குனரின் நடவடிக்கைக்கு, BSNLEU தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது.

தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்