Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, December 28, 2021

சக்திமிகு சங்ககிரி மாநாடு


28.12.2021, இன்று, சங்ககிரி கிளையின் 10வது மாநாடு, சங்ககிரியில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பு செயலர் தோழர் K. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக சங்க கொடியை தோழர் C. ராமசந்திரன், TT ஏற்றி வைத்தார். கிளை பொருளர் தோழர் P. ரவிக்குமார், அஞ்சலியுறை நிகழ்த்த, கிளை செயலர் தோழர் C. கணேசன்,  அனைவரையும் வரவேற்றார்.  

மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு, மாநாட்டை முறைப்படி துவக்கிவைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாநாட்டு பேருரை வழங்கினார்.

பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை,  வரவு செலவு அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. அமைப்பு ரீதியாக சங்ககிரி, எடப்பாடி கிளைகள் ஒன்றாக இணைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் K. சண்முகசுந்தரம், TT தலைவராகவும், C. கணேசன், TT செயலராகவும், P. ரவிக்குமார், TT  பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை, BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள்  K. ராஜன் மற்றும் P. செல்வம், திருச்செங்கோடு கிளை செயலர் தோழர் V. பரந்தாமன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தோழர் V. மயில்சாமி, TT  நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். 

மாநில மாவட்ட மாநாட்டு நிதி முதல் தவணை  ரூ10,000/- வழங்கப்பட்டது. சுவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு தயாரிப்புகள் நன்றாக இருந்தது.  புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்