Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 2, 2019

BSNLEU - TNTCWU உண்ணாவிரத போராட்டம் - 02.07.2019 - முதல் நாள்


BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவலாக்கினங்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பட்டுவாடா செய்ய வலியுறுத்தி, மூன்று நாள் உண்ணாவிரத போராட்டத்தின், முதல் நாள் போராட்டம், இன்று, 02.07.2019, சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன், (BSNLEU ), K . ராஜன் (TNTCWU ) கூட்டு தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்ட கோஷங்களுக்கு பிறகு, TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், துவக்கவுரை வழங்கினார்.

BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . ஹரிஹரன், P . தங்கராஜ், M . சண்முகம், R . கோவிந்தராஜ், GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், TNTCWU நிர்வாகிகள் தோழர்கள் ராஜேந்திரன்(அம்மாபேட்டை), ஜெய்சங்கர்(கொண்டலாம்பட்டி), கண்ணன் (வேலூர்), கோபாலன் (திருச்செங்கோடு) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார்கள். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி நிறைவுரை வழங்கினார். 

BSNLEU வேலூர் கிளை செயலர் தோழர் R . ரமேஷ் நன்றி கூறி முதல் நாள் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட தோழர்கள் (40 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். 

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்