Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 21, 2019

கண்ணீர் அஞ்சலி


BSNLEU தமிழ் மாநில உதவி செயலுரும், TNTCWU மாநில தலைவருமான அருமை தோழர் M . முருகையா, இன்று, 21.03.2019, மாலை 6 மணியளவில், இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். தோழர் முருகையா ஒன்றுபட்ட NFTE சங்கம், ITEU சங்கம், BSNLEU சங்கம், TNTCWU சங்கம், BSNLCCWF சம்மேளனம்  உள்ளிட்ட பல அமைப்புகளில் திறம்பட பணியாற்றியவர். 

தோழரின் மறைவு என்பது பேரதிர்ச்சியாக உள்ளது. ஆரம்ப காலம் முதல் லைன் ஸ்டாப் தோழர்களின் உரிமைகளுக்காகவும், ஒப்பந்த ஊழியர் முன்னேற்றங்களாகவும், கடுமையாக கள பணியாற்றியவர்.  

ஒப்பந்த ஊழியர் சம்மந்தமான நீதி மன்ற வழக்குகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு, தன் இறுதி மூச்சு வரை, அதற்காக அவர் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. 

பொதுவுடைமை சித்தாந்தத்தை தன் இறுதி மூச்சு வரை கொள்கையாக கொண்ட தலைவர். தோழர் முருகய்யாவின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. 

வருத்தங்களுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர் 


குறிப்பு: தோழரின் மறைவு காரணமாக, 22.03.2019, நாளை கொண்டாடவேண்டிய அமைப்பு தினத்தை 25.03.2019க்கு பிறகு கொண்டாடுமாறு சேலம் மாவட்ட BSNLEU சங்கம் கேட்டு கொள்கிறது.