Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 6, 2018

ஐந்தாம் நாள் சத்யாகிரக போராட்டம் - மெய்யனுர் - 03.02.2018




AUAB சேலம் மாவட்ட சங்கத்தின் முடிவின்படி, ஐந்தாம் நாள் போராட்டம், சேலம் மெய்யனுரில், 03.02.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக, அன்னல் காந்தி திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியபின், போராட்டத்தை துவக்கினோம்.

போராட்டத்திற்கு, தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), M . பாஸ்கரன் (SNEA), S. சேதுபதி (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர். 

தோழர் P . தங்கராஜு,(BSNLEU) வரவேற்புரை வழங்கினார். தோழர்கள் N . சந்திரசேகரன்(மாவட்ட உதவி செயலர், SNEA), K . கோவிந்தராஜன், (CWC உறுப்பினர், AIBSNLEA) V. சண்முகசுந்தரம் (மாவட்ட தலைவர் SNEA), P . பழனிசாமி, CEC உறுப்பினர், SNEA), கருத்துரை வழங்கினார்கள். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார். தோழர் M . சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA. தோழர் R . மனோகரன், மாவட்ட செயலர், SNEA, தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் விளக்கவுரை வழங்கினார்கள். 

300 க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்ற இந்த போராட்டத்தை தோழர் G. சேகர், மாவட்ட பொருளர், SNEA,  நன்றி கூறி முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்