Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 8, 2018

TNTCWU மாவட்ட செயற்குழு - மெய்யனுர் - 03.02.2018



03.02.2018 அன்று சேலம் மெய்யனுரில், TNTCWU சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் K . ராஜன், மாவட்ட தலைவர், TNTCWU தலைமை தாங்கினார். தோழர் விஜயகுமார், மெய்யனுர் கிளை செயலர் வரவேற்புரை வழங்கினார். 

தோழர் M . செல்வம், மாநில உதவி தலைவர், TNTCWU செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்தார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்க உரை வழங்கினார். 

தோழர்கள்  S. ஹரிஹரன், M . சண்முகம், P . தங்கராஜ், (BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள்) வாழ்த்துரை வழங்கினார்கள்.

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர். பின்னர் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. 

01. 04.03.2018 அன்று TNTCWU சங்கத்தின் 4வது மாவட்ட மாநாட்டை திருச்செங்கோட்டில் விமர்சையாக நடத்துவது, 

02. மாநாட்டிற்கு இந்திய தொழிற்சங்க தலைவர்களின் மூத்த தலைவரும், BSNLCCWF கூட்டமைப்பின் அகில இந்திய தலைவரான தோழர் V.A.N . நம்பூதிரி அவர்களை அழைப்பது, 

03. நன்கொடை உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது. 

தோழர் P . செல்வம், மாவட்ட பொருளர் TNTCWU நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்