Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, June 11, 2025

STARLINKகிற்கு இந்திய அரசாங்கம் உரிமம் வழங்கி உள்ளது.


இந்தியாவில் செயற்கைக்கோள் மொபைல் சேவையையும், செயற்கைக்கோள் இணையதள சேவையையும் வழங்க, அமெரிக்க நிறுவனமான, எலான் மஸ்கின் STARLINK நிறுவனத்திற்கு, இந்திய அரசாங்கம் உரிமம் வழங்கி உள்ளது. பூமிக்கு மேல் 550 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப் பட்டிருக்கும், தனது LOW EARTH ORBITING செயற்கை கோள்கள் மூலம், STARLINK நிறுவனம், செயற்கைக்கோள் அடிப்படையான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும். செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு, TRAI, ஏற்கனவே அரசாங்கத்திற்கு, தனது பரிந்துரைகளை வழங்கி விட்டதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் STARLINK நிறுவனம் அலைக்கற்றையை பெறுவது உறுதி. 

மறுபுறத்தில், BSNL நிறுவனம், உள்நாட்டு 4G தொழில் நுட்பத்தை தான் பயன்படுத்த வேண்டும் என, அரசாங்கம் கூறுகிறது.  NOKIA ERICSSON மற்றும் SAMSUNG போன்ற பிரசித்தி பெற்ற நிறுவனங்களிடமிருந்து, 4G கருவிகளை வாங்க, BSNL நிறுவனத்திற்கு, அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.  ஒரு நாட்டுத் தொழில்நுட்பம் என்ற பெயரில், BSNL சீரழிக்கப்படுகிறது.  உள்நாட்டு TCS நிறுவனம் வழங்கும், தரம் குறைந்த கருவிகள் மூலம் வழங்கப்படும், திருப்திகரமற்ற 4G சேவைகளின் காரணமாக, ஒவ்வொரு மாதமும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் BSNLஐ விட்டு வெளியேறி வருகின்றனர்.  

அமெரிக்க நிறுவனமான ஸ்டார்லிங்கிற்கு, வெளிநாட்டு தொழில்நுட்பம் மூலம், செயற்கைக்கோள் மொபைல் சேவைகளையும், செயற்கைக்கோள் இணையதள சேவைகளையும் வழங்க, அரசாங்கம் அனுமதி அளிக்கிறது.

தோழர் P. அபிமன்யு,
பொதுச் செயலாளர்

[ ஆதாரம்:- Times of India dt. 07-06-2025]