Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, June 11, 2025

வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த, ஆந்திர பிரதேச மாநில அரசு முடிவு - BSNLEU எதிர்ப்பு


அனைத்து தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்ந்த, தொழிலாளர் நலச் சட்டங் களில் திருத்தத்தை கொண்டு வர, ஆந்திர பிரதேச அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  அதிகமான முதலீடுகளையும் தொழிற்சாலைகளையும் ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக, ஆந்திர பிரதேச அரசாங்கம் கூறுகிறது. 

ஆந்திர பிரதேச அரசாங்கத்தின் இந்த முடிவை, BSNL ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, ஆந்திர பிரதேச மாநில அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பங்களை மட்டுமே, சந்திரபாபு நாயுடு அரசாங்கம் பூர்த்தி செய்கிறது.  இது ஆந்திர பிரதேச மாநிலத்தில் மட்டுமே நடைபெறும் தனித்த நிகழ்வு அல்ல. தற்போதுள்ள 29 தொழிலாளர் நலச் சட்டங்களையும், மோடி அரசாங்கம் நீக்கி விட்டு, நான்கு தொழிலாளர் தொகுப்புக்களை கொண்டு வந்துள்ளது.  இந்த நான்கு தொழிலாளர் தொகுப்புகள் அமலாக்கப் பட்டால், தற்போதுள்ள எட்டு மணிநேர வேலை என்னும் முறை முடிவுக்கு வந்துவிடும். எனவே, ஆந்திராவில் நடைபெறுவது, ஒரு முன்னோட்டம் மட்டுமே. 

வேலை நேரத்தை, வாரத்திற்கு 70 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என, INFOSYS  நிறுவனர் நாராயணமூர்த்தி ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல, L&T நிறுவனத்தின் தலைவர், S.M. சுப்பிரமணியன், தொழிலாளர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கோரி இருந்தார். இந்த முதலாளித்துவ வர்க்கமும், அரசாங்கமும் தொழிலாளர்களை, அடிமைகளாக மாற்ற முயற்சி செய்கின்றன.  இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, 2025, ஜூலை 9ஆம் தேதி, பொது வேலை நிறுத்தத்திற்கு, 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. 

இந்த பொது வேலை நிறுத்தத்தில் நாம் பங்கேற்று, முழு வெற்றி பெறச் செய்வோம்.

தோழர் P. அபிமன்யு
பொதுச் செயலாளர்

[ ஆதாரம்: Times of India dt. 07-06-2025 ]