Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, October 14, 2023

பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து, CoC சார்பாக ஆர்ப்பாட்டம்


18.10.2023 மதியம், புதன்கிழமை, 12.30 மணி அளவில், 

சேலம் மெயின் தொலைபேசி நிலையம். 

பாலஸ்தீன மக்களுக்கு நமது ஒருமைப்பாட்டை தெரிவிக்கவும், அவர்களின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்தும், ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்களின் உலக சம்மேளனம் (WFTU), உறுப்பு சங்கங்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், 18.10.2023 அன்று, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, CoC, மத்திய மாநில அமைப்புகள் அறைகூவல் கொடுத்துள்ளது.

நமது சேலம் மாவட்டத்தில், இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட, வருகிற 18.10.2023 புதன் கிழமை, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், மதியம் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது.

BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாவட்டநிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள்  இந்த இயக்கத்தில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E. கோபால், 
கன்வீனர், CoC 
S. தமிழ்மணி, 
மாவட்ட செயலர், AIBDPA 
M. செல்வம், 
மாவட்ட செயலர் TNTCWU