Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, June 28, 2022

AUAB சார்பாக ராஜ்யசபா உறுப்பினரிடம் மகஜர்!


சேலம் மாவட்ட AUAB சார்பாக, மேல் சபை பாராளுமன்ற உறுப்பினர், உயர்திரு  K. R. N ராஜேஷ்குமார், அவர்களை, நாமக்கல்லில், இன்று (28.06.2022) சந்தித்து AUAB கோரிக்கை மகஜர் வழங்கினோம்.

AUAB மகஜர் வழங்கும்போது, மாநில சுற்றுலாதுறை அமைச்சர் டாக்டர் M. மதிவேந்தன் அவர்களும் உடன் இருந்தார். இருவரும் நமது கோரிக்கையின் நியாயத்தை முழுவதுமாக உள் வாங்கி கொண்டனர். மேல் சபை MP உரிய மட்டத்தில் இது சம்மந்தமாக கேள்வி எழுப்புவதாக உறுதி அளித்தார்.

நிகழ்வில், AUAB அமைப்பின் சேலம் மாவட்ட கன்வீனர் தோழர் E. கோபால், AIGETOA சார்பாக தோழர் B. மணிகுமார், மாவட்ட செயலர், தோழர் D. தியாகராஜன், மாவட்ட தலைவர், தோழர் V. அன்பழகன் மாவட்ட பொருளர், தோழர் S. ராமசந்திரன், மாவட்ட உதவி செயலர், SNEA சார்பாக அகில இந்திய மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் G. சேகர், மாவட்ட தலைவர் தோழர் V. குருவாயூர் கண்ணன், மாவட்ட பொருளர் தோழர் P. பொன்ராஜ், மாவட்ட உதவி தலைவர் தோழர் C. செந்தில்குமார், AIBSNLEA சார்பாக தோழர் V. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் P. தங்கராஜு, P.  செல்வம், K.  ராஜன்,  கிளை செயலர்கள் தோழர்கள் P. பத்மநாபன் (சேலம் மெயின்), S. கணேசன், (ராசிபுரம்), V. பரந்தாமன் (திருச்செங்கோடு), N. சிவகுமார் (செவ்வை) AIBDPA அமைப்பு சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, மாவட்ட உதவி செயலர் தோழர் ராமசாமி, கிளை செயலர் தோழர் D. சுப்பிரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழமையுடன், 
E. கோபால்,
கன்வீனர், AUAB சேலம்