Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, December 26, 2021

சிறப்புமிகு திருச்செங்கோடு மாநாடு


23.12.2021 அன்று திருச்செங்கோடு நகர, ஊரக, பள்ளிபாளைய கிளைகளின் இணைந்த 10வது மாநாடு, திருச்செங்கோட்டில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் R. சரவணன்,  கிளை தலைவர் தலைமை தாங்கினார். சங்க கொடியை தோழர் P. தங்கராஜு, மாவட்ட பொருளர் ஏற்றி வைத்தார். தோழர் V. பரந்தாமன்,  பள்ளிபாளைய கிளை செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் C. ஆண்டியப்பன், நகர கிளை செயலர், அனைவரையும் வரவேற்றார்.

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் P. தங்கராஜு, மாவட்ட பொருளர், மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் கருத்துரை வழங்க,  தோழர் E. கோபால், மாவட்ட செயலர்,  தோழர் S. தமிழ்மணி,  தமிழ் மாநில உதவி தலைவர் ஆகியோர் மாநாட்டு சிறப்புரை வழங்கினார்கள்.

பின்னர் நடைபெற்ற பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை, நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்கப்பட்டது. புதிய  நிர்வாகிகள் தேர்வில், மூன்று கிளைகள் அமைப்பு ரீதியாக ஒன்றாக இணைக்கப்பட்டு, தோழர் R. சரவணன், TT, தலைவராகவும், தோழர் V. பரந்தாமன், TT, செயலராகவும், K. செல்வராஜூ, JE பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் M. சண்முகம், K. ராஜன், P. செல்வம்,  கிளை செயலர்கள் தோழர்கள் N.  பாலகுமார் (GM அலுவலகம்), R. ரமேஷ், (வேலூர்)  ஆகியோர் வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கினார்கள்.  கிளை உதவி செயலர் தோழர் A. தாமரைச்செல்வன், JE  நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். சுவையான உணவு அன்பாக வழங்கப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது. மாநில மாவட்ட மாநாட்டு நிதி முதல் தவணை ரூ. 20,000/- வழங்கப்பட்டது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. அவர்கள் தம் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.


தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்