Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, May 6, 2021

குடும்பத்தாருக்கு, பரிவு அடிப்படையில் பணி



கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, பரிவு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம்


இதுவரை சுமார் 75 BSNL ஊழியர்கள் பெருந்தொற்றால் உயிரிழந்ததாக தெரிய வருகிறது. இதில் கணிசமானவர்கள் இளைஞர்கள். ஊழியர்களிடம் நிதி திரட்டி, கொரோனாவில் பலியான ஊழியர்களின் குடும்பத்தாருக்கு நிதி உதவி செய்யும் திட்டத்தை நிர்வாகம் முன்வைத்துள்ளது.

கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்த பட்சம் ஐந்து லட்ச ரூபாய்களையாவது, BSNL நிர்வாகம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இருப்பினும், பொருளாதார உதவி என்பது தற்காலிக நிவாரணமே. பரிவு அடிப்படையில் பணி வழங்குவது என்பதே அவர்களுக்கு, வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். எனவே கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிவு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்