Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, November 26, 2019

25.11.2019 உண்ணாவிரத போராட்டம்



2019 அக்டோபர் மாத சம்பளம், ஒப்பந்த ஊழியர் 10 மாத சம்பள நிலுவை, விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் இதர முக்கிய பிரச்சனைகளில் உள்ள அநீதிகளை களைய, 25.11.2019 அன்று நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை நடத்த BSNLEU, BTEU, FNTO, BSNL MS, BSNL ATM மற்றும் BSNL OA மத்திய சங்கங்கள் கூட்டாக போராட்ட அறைகூவல் கொடுத்திருந்தன.

அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில், 25.11.2019, நேற்று, சேலம் PGM அலுவலகத்தில், BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக, உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட கோஷங்களை மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . சண்முகம், P . செல்வம் எழுப்பினர்.

போராட்டத்தை துவக்கி வைத்து, தோழர் S . ஹரிஹரன், BSNLEU சேலம் மாவட்ட தலைவர், துவக்கவுரை வழங்கினார். AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் P . ராமசாமி, மாவட்ட செயலர் தோழர் M . மதியழகன், TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர் தோழர் M . செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். ஏற்கனவே, VRS அமுல்படுத்தப்பட்ட வங்கி துறை சார்பாக, BEFI செயலர் தோழர் P. B . ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். CITU தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் S. K. தியாகராஜன் நிறைவுரை வழங்கினார்.

மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 150 ஊழியர்கள் திரளாக பங்குபெற்றனர்.

வாழ்த்துக்களுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்