Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 12, 2018

மேட்டூர் கிளை 8வது மாநாடு - 11.10.2018


11.10.2018, நேற்று, மேட்டூர் கிளையின், 8வது  மாநாடு, மேட்டூர் RS தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் J. மணி, தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை மூத்த தோழர் செல்வம் ஏற்றி வைத்தார். தோழர் A .சார்லஸ் பிரேம் குமார், மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுறை நிகழ்த்தினார். தோழர் A . குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். 

ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி தலைவர் துவக்கவுரை வழங்கினார். மேட்டூர் கிளை தோழர்களின் ஆய்படு பொருள் மீதான விவாதத்திற்கு பின், தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். 

பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் J . மணி,  M . கோபாலன், L. வெங்கடசன் முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. 

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர், தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றியபின், புதிய கிளை செயலர் தோழர் M . கோபாலன், நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜு, G. நாராயணன், M . பன்னீர்செல்வம், P. செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் P.M. ராஜேந்திரன் (ராசிபுரம்), N . பாலகுமார் (GM அலுவலக கிளை), TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பணி சிறப்பாக அமைய மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்