Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, April 2, 2017

TNTCWU செவ்வை கிளை மாநாடு


TNTCWU  செவ்வை கிளையின் மாநாடு, 01.04.2017 அன்று கொண்டலாம்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் வீரேஷ்குமார், JE தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் M .செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.

TNTCWU சேலம் மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், செவ்வை கிளை செயலர் தோழர் இளங்கோவன், இளம்பிள்ளை கிளை செயலர் தோழர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் மற்றும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் 
M. செல்வம் தலைவராகவும், தோழர் 
A . ஜெய்சங்கர் செயலராகவும், தோழர் 
M . மணி பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் செந்தில்குமார் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்