பணி ஓய்வு பெறும் அன்றே, ஓய்வூதிய பலன்கள் முழுமையாக, ஊழியர்கள் கையில் கிடைப்பது போன்ற ஏற்பாடு முன்பெல்லாம் இருந்தது. சில பல காரணங்களால், அந்த நடைமுறை சாத்தியமற்றதாகிவிட்டது. நமது, BSNLEU சங்கம் பழைய நடைமுறையை, தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதற்கு தடையாக இருந்த விஷயங்கள் இரண்டு. ஒன்று, ஓய்வூதிய விண்ணப்பங்கள் கால தாமதமாக கோரப்பட்டு, DoT க்கு அனுப்பப்பட்டது. மற்றொன்று, பணி பதிவேட்டில், விவரங்கள் சரியாக பதியப்படாத நிலை. இவை இரண்டையும் போக்க நமது சங்கம் பல கட்ட பேச்சுவார்த்தையை, நமது கார்ப்பரேட் அலுவலகத்திலும், DoT அலுவலகத்திலும் மேற்கொண்டது.
விளைவு, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, நேற்று, 29.03.2017 அன்று புதிய வழிகாட்டுதல் கார்ப்பரேட் அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 31.03.2017 க்கு பின், பணி ஓய்வு பெறுவோறுக்கு, முழு ஓய்வூதிய பலன்களும் பணி ஓய்வு தினத்தன்றே பட்டுவாடா செய்யவேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் 24 மாதங்களுக்கு முன்பே, தொடங்கப்பட வேண்டும் எனவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
இணைப்பு காண இங்கே சொடுக்கவும்