திருச்செங்கோடு நகர மற்றும் ஊரக கிளைகள் இணைந்த மாநாடு, திருச்செங்கோட்டில் 25.10.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் V. நாராயணன் மற்றும் S . ரங்கசாமி, கிளை தலைவர்கள் கூட்டு தலைமை தாங்கினர் .
முதல் நிகழ்வாக, தோழர் S. தங்கராஜ், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, சங்க கொடி ஏற்றி வைத்தார். ஊரக கிளை தோழர் K. செல்வராஜ், அஞ்சலியுறை வழங்கினார்.
தோழர் K . ராஜன், ஊரக கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.
சேவை சம்மந்தமான கருத்துக்களை திரு. K . பாலசுப்ரமணியம், கோட்ட பொறியாளர் வழங்கி, மாநாட்டை வாழ்த்தினார்.
தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் M . சண்முகம், P . தங்கராஜ், கிளை செயலர்கள் தோழர்கள் நாராயணன் (எடப்பாடி), பரந்தாமன் (பள்ளிப்பாளையம்), ரமேஷ் (வேலூர்), சின்னசாமி (நாமக்கல் ஊரகம்), கணேசன் (சங்ககிரி), தல மட்ட கவுன்சில் உறுப்பினர் தோழர் ரவிமணி, ராசிபுரம் கிளை தலைவர் தோழர் P .M .ராஜேந்திரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.
ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், திருச்செங்கோடு நகர கிளைக்கு தோழர்கள் V . நாராயணன், M . ராஜலிங்கம்,
S .தங்கராஜ் தலைவர், செயலர், பொருளராகவும், திருச்செங்கோடு ஊரக கிளைக்கு தோழர்கள் S . ரங்கசாமி, K . ராஜன்,
K. செல்வராஜூ, தலைவர், செயலர், பொருளராகவும், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்கப்பட்டது. தோழியர்
K .M .புவனேஸ்வரி, JE நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்