Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, August 24, 2016

அராஜகத்தை எதிர்த்து கண்டன முழக்கம்




கொல்கத்தா CTO வளாகத்தில் உள்ள BSNLEU மேற்கு வங்க மாநில சங்க அலுவலக மீது, 19.08.2016 அன்று திர்ணாமூல் குண்டர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.  கேடு கேட்ட இந்த காட்டு மிராண்டி செயலை கண்டித்து நாடு முழுவதும், 24.08.2016 அன்று கண்டன முழக்கம் செய்ய நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, நமது சேலம் மாவட்ட சங்கம் சார்பாக 24.08.2016 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவரும் மாநில சங்க உதவி செயலுருமான தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார். தோழர் E . கோபால், மாவட்ட செயலர் கண்டன பேருரை வழங்கினார். மாவட்டம் முழுவதிலுமிருந்து மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்