நமது பொது செயலர் அருமை தோழர் P . அபிமன்யூ, கலந்து கொண்ட தேர்தல் சிறப்பு கூட்டம் 21.03.2016 அன்று மாலை சேலத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. சேலம் மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த தேர்தல் சிறப்பு கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி, தலைமை தாங்க, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், அனைவரையும் வரவேற்றார். தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பாக, அதன் மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பின்னர் நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ சிறப்புரை வழங்கினார்.பொது செயலர் தமது சிறப்புரையில், BSNLEU அங்கீகாரத்திற்கு வந்த இந்த 12 ஆண்டுகளில், ஊழியர்களுக்கு பெற்று செய்த சலுகைகள், நமது சாதனைகள், அரசாங்க கொள்கைகள், நிறுவன நிலை, மற்ற சங்கங்கள் நிலை, கூட்டணி, ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள், என பல விஷயங்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்து கூறி, சிறப்புரை வழங்கினார்.
சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஒய்வு பெற்ற ஊழியர்கள், மாநில அமைப்பு செயலர் தோழர் M . பாபு, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தை மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்