![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjar98iWQ3rfT7ZfPi1IH3R9o3-oVGjeH6eah7xcoOLcGmHEfSjBrn3cd1MDMye1MxOhKK5X0oK1_hux_PXz5mijikxZvA1R1X7_ctA9R2zJAFtk7ubyHPsLe84VkDx_Imyng-1tnglwTsz/s320/20150322_124940.jpg)
அருமைத் தோழர்களே! விசாகப்பட்டனத்தில், 22-03-2001 அன்று 7 தொலைத்தொடர்பு சங்கங்களை இணைத்து துவக்கிய பேரியக்கம் தான் நமது BSNLEU பேரியக்கம். இன்று ஆலமரமாய் தழைத்து, ஒட்டு மொத்த BSNL ஊழியர்கள், அதிகாரிகள் , ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் என அனைவரின் நலன்காக்கும் பேரியக்கமாக திகழ்ந்து வருகிறோம்.
BSNL நிறுவனத்தை 100 சதம் அரசு துறை நிறுவனமாகவே காக்கவும், அரசாங்கத்தின் பிற்போக்கான கொள்கைகளை எதிர்க்கவும், ஊழியர் நலன் போற்றி பாதுகாத்திடவும், சமரசமற்ற போராட்ட பதாகையை உயர்த்தி பிடிக்கவும், BSNLEU பேரியக்கத்தை துவக்கினோம்.
இந் நன்நாளில் சேலம் மாவட்ட சங்கம் அனைவருக்கும் BSNLEU சங்கத்தின் 16 வது அமைப்பு தின வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறது.
அனைத்து கிளைகளிலும் நமது BSNLEU சங்க
கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி, அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
15 வருட காலம் என்பது சிறிய காலம் என்றாலும், நமது சங்கம் சாதித்த சாதனைகள் ஏராளம். அந்த சாதனைகளை நமது வாக்காளர்களிடம் கொண்டு சென்று, நினைவுப்படுத்தி, 51 சத வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக நமது சங்கத்தை மாற்றுவது தான் இன்றைய தினம் நாம் எடுத்துகொள்ள வேண்டிய சபதமாகும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
முதல் மத்திய சங்க நிர்வாகிகள்