Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, September 6, 2014

"கெட்டியான" இரும்பாலை கிளை மாநாடு



சேலம் இரும்பாலை கிளையின் 7வது மாநாடு 06.09.2014 அன்று சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டிற்க்கு தோழர் A.C. சுப்ரமணியம், கிளை தலைவர் தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் R. ஆறுமுகம், அனைவரையும் வரவேற்றார். 

மாவட்ட செயலர் தோழர் E. கோபால் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில்குமார், கிளை செயலர்கள் தோழர்கள் காளியப்பன், (MAIN), சம்பத் (மெய்யனூர்) பழனிசாமி (TRA), பாலகுமார் (GM அலுவலகம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

முடிவில் தோழர் A.C. சுப்ரமணியம், கிளை தலைவராகவும், 
தோழர் R. ஆறுமுகம், கிளை செயலராகவும், தோழர் R. ராமசாமி, கிளை பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 

தோழர்களின் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.