Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 21, 2014

19.04.14 கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்...



அருமைத்தோழர்களே!   தமிழ் மாநில சங்கம் சார்பாக ராஜ்கோட் மத்திய செயற்குழுவில் எடுத்தமுடிவின்படி திறந்த வெளி கருத்தரங்கம் மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்துதலைமையில் கோவை மத்தியதொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றதுவந்திருந்த அனைவரையும் கோவை மாவட்டசெயலர் தோழர் ராஜேந்திரன் வரவேற்று உரை ஆற்றினார்மத்திய தொழிற்சங்கங்களின் 10 அம்சகோரிக்கைகளும்அதற்கான போராட்டங்களும் என்ற தலைப்பில் உரையாற்றியநமது மாநில செயலர் தோழர்செல்லப்பா அவர்கள் தன் உரையில்பொதுத்துறை உருவான வரலாற்றையும்,பொதுத்துறை நிறுவனங்கள்தன்  லாபத்தில் அரசுக்கு அளித்த மிக பெரிய பங்களிப்பையும் சுட்டி காட்டினார்உலகமயமாக்கல்,தனியர்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தும் தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசும்  அதற்கு முந்திய  பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி  அரசும் பொது துறையை சீரழிக்கும் கொள்கையை கடைபிடிப்பதையும் அதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 1991முதல் இதுவரை நடத்திய 16 வேலை  நிறுத்த போராட்டங்களிலும் நமது BSNLEU சங்கம் பங்கேற்றதின்விளைவாகத்தான் இன்று வரை 1% பங்குகள்கூட விற்கப்படாமல் நமது BSNL நிறுவனம்  காக்கக்பட்டுஉள்ளதை நினைவூட்டினார்மேலும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக  ரூபாய் 10,000/-வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 10 அம்ச கோரிக்கையில் உள்ளதை சுட்டி காட்டினார். 

மத நல்லிணக்கமும் தொழிலாளி வர்க்க கடமையும்என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய தீண்டாமைஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்  தோழர் Pசம்பத் தன் உரையில் இந்தியாவின் பிரிவினைக்குகாரணமான மதவாத சக்திகளின் போக்கைவரலாற்று சான்றுகளுடன் சுட்டி காட்டினார்தேசதந்தை மகாத்மாவின் படுகொலைக்கு காரணமானமதவாத சக்திகள் மீண்டு எழுவது தேசநலனுக்கு  மிக ஆபத்து என்பதையும்,  இந்தியாவில்மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக போராடக்  கூடிய ஒரே அமைப்பு இடதுசாரிகள் மட்டுமே என்பதைஅவர் ஆணித்தரமாக கூறினார்பாபரி மசூதி தாக்கபட்ட நேரத்தில் இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில்மட்டுமே  சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடைபெற வில்லை என்பதை அவர் கூறினார். 
அதன்பின் தாராள மயமாக்கல் கொள்கையும்,தொலை தொடர்பு கொள்கையும் என்ற தலைப்பில்உரையாற்றிய நமது பொது செயலர் தோழர்P.அபிமன்யு அவர்கள் தாராளமய கொள்கையால்,பொதுதுறை நிறுவனங்கள் எவ்வாறுபாதிக்கப்படுகின்றன என்பதையும்,இக்கொள்கையால் அரசு துறையில்  ஊழல்புரையேடி போகும் அவலத்தையும் சுட்டிகாட்டினார்கடந்த 2014 பிப்ரவரி மாதம் முதல் 30,000கோடி ரூபாய் அந்நிய நாட்டு பணம்  இந்திய பங்குசந்தையில் முதலீடாக கூடியதன் நோக்கம் பற்றியும்,குஜராத் மாநிலத்தில் பெண்கள் பெருமளவில் ரத்தசோகை நோயால்  அவதிப்படுவதையும்அந்தமாநில அரசு தினமும் 10 ரூபாய்க்கு மேல்சம்பாதிக்கும் அனைவரும் வறுமை கோட்டிற்குமேல் வாழ்வதாக கூறுவதின்  அவலத்தையும் சுட்டிகாட்டினார்கார்போரேட்  நிறுவனங்களும்,அவைகளின் பெரும்பாலான ஊடகங்களும்  மோடியை தூக்கி நிறுத்துவதன் நோக்கத்தை அவர்  எடுத்துரைத்தார்ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி அனைத்து மாநிலங்களிலும்இக்  கருத்தரங்கம் வெற்றிகரமாய்   நடை பெறுவதை சுட்டி காட்டினார்நிலுவையில்உள்ள  கோரிக்கைகளுக்காக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட உள்ள சூழலையும் அவர் கூறினார்.தோழர் வெங்கட்ராமன் நன்றியுரை கூற கருத்தரங்கம் இனிதே முடிவுற்றது