Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, March 14, 2014

மகத்தான மாவட்ட செயற்குழு



சேலம் மாவட்ட செயற்குழு 
தோழர் MN பணி நிறைவு பாராட்டு விழா 
RGB வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 
எடப்பாடி கிளை மாநாடு

என நான்கு விழாக்கள் 13.03.2014 அன்று எடப்பாடியில் சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு மாவட்ட செயற்குழுவிற்க்கு தோழர் S. தமிழ்மணி மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் P. சண்முகம், மாவட்ட அமைப்பு செயலர் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். தோழர் M.P. ஜெகன்நாதன்,(எடப்பாடி கிளை) அஞ்சலி உரை வழங்கினார். அஜண்டா ஒப்புதல் பெற்ற பிறகு தலைவர் தலைமை உரை நல்கினார். அதன் பிறகு தோழர் E. கோபால் மாவட்ட செயலர் துவக்கவுரை நிகழ்த்தி கூட்டத்தின் ஆய்படு பொருளை விளக்கி பேசினார். பின் தோழர் MN க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நினைவு பரிசு வழங்கப்பட்டது. RGB வேட்பாளர்கள் மேடைக்கு வர வழைக்கப்பட்டுஅறிமுக படுத்தப்பட்டனர். பின் தோழர் MN ஏற்புரை மற்றும் சிறப்புரை வழங்கினார். 22 கிளை செயலர்கள் மற்றும் 14 மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். நிறைவாக மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார். RGB தேர்தலில் நமது 11 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வது, அதற்காக கூட்டங்கள் நடத்துவது, 78.2 சத வீத நன்கொடையை பூர்த்தி செய்வது, கிளை மாநாடுகளை விரைந்து நடத்தி முடிப்பது, என பல முடிவுகள் எடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலிருந்தும் சுமார் 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர். அடக்கமான இடம், சுவையான உணவு, அன்பான உபசரிப்பு, பேருந்து நிலையத்திருக்கு அருகில் மண்டபம் என நல்ல ஏற்பாடு செய்த எடப்பாடி கிளையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள். இறுதியாக தோழர் G. நாராயணன் எடப்பாடி கிளை செயலர் நன்றி கூற மாலை 7 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. 

முன்னதாக காலையில் எடப்பாடி கிளை மாநாடு நடை பெற்றது. மாநாட்டில் தோழர் கணேசன் கிளை தலைவராகவும், தோழர் நாராயணன் கிளை செயலராகவும், தோழர் செங்கோட்டையன் கிளை பொருளாராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்