Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 4, 2019

வேலை நிறுத்த போர் பிரகடனம் வெளியிடப்பட்டது!. போர் முரசு கொட்டப்பட்டது..

  Related image


01.02.2019 அன்று டில்லியில் நடைபெற்ற AUAB கூட்டத்தில், இனியும் பொறுக்க முடியாது. போராட்டம் ஒன்றே தீர்வு என முடிவு செய்து போர் பிரகடனம் வெளியிடப்பட்டது. காரணம், தொலை தொடர்பு துறையோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை, நாம் விரும்பிய முடிவை தரவில்லை. அதன்படி, 18.2.19 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை AUAB கொடுத்துள்ளது. நேரம் குறுகியதாக இருப்பதால் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட AUAB கேட்டு கொள்கிறது. 

 கோரிக்கைகள்

1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு!

2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்!

3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து. ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்திலிருந்து பிரிப்பது என மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி மொழியை அமல்படுத்து!.

4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்!

5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு!

6) அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமுமின்றி ஒப்புதல் வழங்கு!

ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு! 

7)அ) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு! வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு!

ஆ) BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு தேவையான LETTER OF COMFORT உடனே வழங்கு!

இ) BSNL இயக்குனர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நிரப்பிடு!

8) BSNLமொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு!

இயக்கங்கள் 

1) பல்வேறு எதார்த்த நிலைமைகளை கணக்கில் கொண்டு, BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் 18.02.2019 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது. 

2) நமது போரட்ட கோரிக்கைகளின் மீது பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 11.02.2019 முதல் 5 நாட்கள் தெருமுனை பிரச்சாரம் செய்வது. 

3) மாநில/மாவட்ட மட்டங்களில் பிப்ரவரி 12/13 தேதிகளில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது. 

4) BSNLஇன் புத்தாக்கம் உள்ளிட்ட நமது கோரிக்கைகளின் மீது அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆதரவை திரட்டுவது.

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU  
போராட்ட அறைகூவல் காண இங்கே சொடுக்கவும்