Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 27, 2018

இரண்டாம் நாள் உண்ணாவிரதம் - 25.07.2018 - சேலம் MAIN


AUAB கூட்டமைப்பின், போராட்ட அறைகூவல்படி, நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, 25.07.2018 அன்று இரண்டாம் நாள் உண்ணாவிரத போராட்டம், சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), M . ரங்கராஜன் (SNEA), S . சேதுபதி (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினார்கள்.

போராட்டத்தை தோழர் G. சேகர்,  மாவட்ட பொருளர் , SNEA, முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார். SNEA CEC உறுப்பினர் தோழர் M .R . தியாகராஜன், வாழ்த்துரை வழங்கினார்.

தோழர் K . கோவிந்தராஜன், (AIBSNLEA), S . ஹரிஹரன்(BSNLEU), P . தங்கராஜு (BSNLEU), ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

பின்னர் சேலம் மாவட்ட செயலர்கள், தோழர் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), R . மனோகரன் (SNEA), E . கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 150 தோழர்கள் (50 பெண்கள் உட்பட) போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். தோழர் கோவிந்தராஜூ, கிளை செயலர், SNEA, நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்