Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, September 21, 2016

24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்



மத்திய சங்க அறைகூவல்படி, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 20.09.2016 அன்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, நமது மாவட்ட சங்கம் சார்பாக, பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட உதவி செயலர் தோழர் விஜயன் தலைமை தாங்கினார். 

மாநில சங்கம் சார்பாக மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 

மாவட்ட உதவி தலைவர்கள் தோழர்கள் சின்னசாமி, செல்வராஜ், மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஹரிஹரன், தங்கராஜு, சண்முகம், மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர்கள் பன்னீர்செல்வம், ரமேஷ், சண்முகம், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார் (GM அலுவலகம்) ராஜலிங்கம் (திருச்செங்கோடு), கோவிந்தராஜூ, (ராசிபுரம்),  ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்