Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 17, 2015

FORUM சார்பாக நாடு தழுவிய தர்ணா போராட்டம்


16.09.2015 அன்று FORUM சார்பாக நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கபட்டு இருந்தது. நமது மாவட்டத்தில் நிலவிய சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக, மாலை நேர தர்ணாவாக நாம் நடத்தினோம். 

சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை 4 மணிக்கு துவங்கி 7 மணி வரை சுமார் 200 தோழர்கள் பங்கு பெற்ற போராட்டமாக நடை பெற்றது. 

போரட்டத்திற்கு, தோழர்கள் S . தமிழ்மணி, (BSNLEU), S . காமராஜ், (NFTEBSNL), K . சுப்ரமணி , (SNEA), A . குமாரசாமி, (AIBSNLEA ) கூட்டு தலைமை தாங்கினார்கள் . 

தோழர்கள் M . சம்பத், மாவட்ட தலைவர், (SNEA), சுப்பையா (AIBSNLEA ), சேகர், மாவட்ட பொருளர் (SNEA), C . பாலகுமார், மாவட்ட செயலர் (NFTEBSNL), E . கோபால், மாவட்ட செயலர், (BSNLEU) கருத்துரை வழங்கினார்கள். 

இறுதியாக தோழர் C . செந்தில் குமார், மாவட்ட பொருளர் BSNLEU நன்றி கூறி தர்னாவை முடித்து வைத்தார். போராட்டத்தில் திரளாக கலந்து கொண்ட அனைத்து சங்க தோழர், தோழியர்களுக்கும் சேலம் மாவட்ட FORUM சார்பாக நன்றிகள், பாராட்டுகள். 

தோழமையுடன் 
E . கோபால், 
கன்வீனர், FORUM மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU