Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 17, 2015

ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனைக்காக கூட்டு ஆர்பாட்டம்




ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் பட்டுவாடா செய்வதில் ஏற்படும் கால 
தாமதத்தை கண்டித்து, BSNLEU, NFTEBSNL, TNTCWU , TMTCLU  நான்கு மாவட்ட சங்கங்கள் சார்பாக கூட்டு ஆர்பாட்டம் 16.09.2015 அன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிறப்பாக நடைபெற்றது. 

ஆர்ப்பாட்த்திற்கு தோழர்கள் K . ராஜன், மாவட்ட தலைவர் TNTCWU மற்றும் தோழர் S .காமராஜ், மாவட்ட பொருளர், NFTEBSNL கூட்டு தலைமை தாங்கினார்கள் . 

ஆர்பாட்டத்தை, தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர், BSNLEU துவக்கி வைத்தார். 

தோழர்கள் P . செல்வம், மாவட்ட செயலர், TMTCLU , தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர், TNTCWU , M . செல்வம், மாநில அமைப்பு செயலர், TNTCWU , R . மணி, மாவட்ட அமைப்பு செயலர், NFTEBSNL , S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

தோழர் C . பாலகுமார், மாவட்ட செயலர், NFTEBSNL,  தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU சிறப்புரை வழங்கினார்கள். 

இறுதியாக, தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர், TNTCWU நன்றி கூறி ஆர்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட் டத்தில், சுமார் 150 நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், (25 பெண்கள்) திரளாக கலந்து கொண்டனர். 

15.09.2015 அன்று பொது மேலாளரை சந்தித்து மகஜர் அளித்திருந்தோம். 16.06.2015 அன்று துணை பொது மேலாளர் (நிர்வாகம்) அவர்களை ஆர்பாட்டம் முடிந்து சந்தித்தோம். வெள்ளி அல்லது சனியன்று சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும் மாதா  மாதம் ஏற்படும் பிரச்சனைகளை களைய, முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு செய்யவும்  உறுதி அளித்தார். 

நாமும், பிரச்சனைகள் தீரவில்லை என்றால், அடுத்த கட்டமாக ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் குதிப்போம் என தகவல் தெரிவித்து விட்டு வந்துளோம் . 

போராட்டத்தில், கலந்து கொண்ட அணைத்து தோழர்களுக்கும் நான்கு மாவட்ட சங்கங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தோழமையுடன்,
BSNLEU , NFTEBSNL , TNTCWU , TMTCLU,
சேலம் மாவட்டம்.