Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, August 26, 2020

முதல் நாள் உண்ணாவிரதம்!


BSNLCCWF மத்திய கூட்டமைப்பின், அறைகூவலுக்கிணங்க, ஒப்பந்த ஊழியர்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 25.08.2020 அன்று, முதல் நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

நமது சேலம் மாவட்ட BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்களின் முடிவின்படி, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், மாவட்டம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு தோழர் K . ராஜன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், போராட்டத்தை துவக்கி வைத்தார். BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சக்திவேல், செல்வம், AIBDPA மாவட்ட சங்க நிர்வாகி, தோழர் T . பழனி, TNTCWU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், நன்றி கூறி முதல் நாள் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், 20 பெண்கள் உட்பட 60 தோழர்கள் கலந்து கொண்டனர். 26.08.2020 அன்று கிளைகளில் போராட்டம் நடைபெறும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்