Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, June 4, 2019

இணைந்த கிளை மாநாடுகள்



BSNL எம்ப்ளாயீஸ் யூனியன், திருச்செங்கோடு நகர, ஊரக, பள்ளிபாளைய கிளைகள் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க, திருச்செங்கோடு கிளைகளின் இணைந்த மாநாடு,  26.05.2019 அன்று திருச்செங்கோடு தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

தலைமைக்குழுவாக, தோழர்கள் P . தங்கராஜ், P . செந்தமிழ்செல்வன், A . தாமரைச்செல்வன், A . கோபாலன் ஆகியோர் செயல்பட்டனர். முதல் நிகழ்வாக, BSNLEU சங்க கொடியை தோழர் V. நாராயணன், கிளை தலைவர் ஏற்றிவைத்தார். TNTCWU சங்க கொடியை தோழர் K . ராதாகிருஷ்ணன், ஏற்றி வைத்தார். தியாககிகளுக்கு அஞ்சலி செலுத்தியபின், அஞ்சலியுறை தோழர் K . செல்வராஜ் வழங்கினார். தோழர் பரந்தாமன், கிளை செயலர், பள்ளிபாளையம் அனைவரையும் வரவேற்றார். 

தோழர் S . தமிழ்மணி, BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார். தோழர் C .பாஸ்கர், TNTCWU மாநில உதவி செயலர், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஹரிஹரன், சண்முகம், ராமசாமி வாழ்த்துரை வழங்க, தோழர் M . செல்வம், TNTCWU சேலம் மாவட்ட செயலர் மற்றும் தோழர் E . கோபால், BSNLEU சேலம் மாவட்ட செயலர் மாநாட்டு பேருரை வழங்கினார்கள். 

செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. தோழர்கள் C . ஆண்டியப்பன், (திருச்செங்கோடு நகரம்) தோழர் K . செல்வராஜூ( திருச்செங்கோடு ஊரகம்), தோழர் V. பரந்தாமன்( பள்ளிபாளையம்), தோழர் K . வெங்கடேஸ்வரன் (TNTCWU திருச்செங்கோடு) கிளை செயலர்களாக கொண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் ராஜலிங்கம் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்