Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 26, 2018

2019 ஜனவரி 8, 9 இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்



நாடு முழுவதும், மத்திய அரசின் தேச விரோத, மக்கள் விரோத, நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்து, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக, 2019 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில், இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. 

நமது BSNL நிறுவனத்தில் உள்ள BSNLEU, NFTEBSNL, TEPU, BSNLMS சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவெடுத்து, கூட்டாக, 24.12.2018 அன்று வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 


கோரிக்கைகள்:

மத்திய அரசே!

1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, பொது விநியோக முறையை பலப்படுத்து. 

2. வேலை வாய்ப்புக்களை உருவாக்கு.

3. தொழிலாளர் நல சட்டங்களை கறாராக அமுல்படுத்து, மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கு.

4. அனைத்து தொழிலாளருக்கும் நலத்திட்டங்களை அமுல்படுத்து.

5. ஒப்பந்த தொழிலாளிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.18000 வழங்கு.

6. அனைத்து வகை தொழிலாளர்களுக்கும்,  குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3000 வழங்கு.

7. பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்து.

8. ஒப்பந்த ஊழியர் முறையை ரத்து செய், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு.

9. போனஸ் மற்றும் வைப்புநிதி EPF உச்சவரம்பை நீக்கு, பணிக்கொடை அளவை உயர்த்து.

10. தொழிற்சங்க பதிவுகளை விரைந்து நடைமுறைப்படுத்த, சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளை அமுல்படுத்து. 

11. தொழிலாளர் விரோத சட்டங்களை உருவாக்காதே.

12. இரயில்வே, காப்பீடு, பாதுகாப்பு துறைகளில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்காதே, 

நமது மாவட்டத்தில் இரண்டு நாள் தேச பக்த போராட்டத்தை வெற்றிகரமாக்க, தோழர்களே தயாராவீர் ! 

20 கோடி தொழிலாளர்களுடன் நாமும் இணைவோம்!! 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்