Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, October 28, 2018

TNTCWU மேட்டூர் கிளை மாநாடு


TNTCWU சங்கத்தின் மேட்டூர் கிளை மாநாடு, 27.10.2018 அன்று, மேட்டூர் RS தொலைபேசி நிலைய LMR அறையில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு, TNTCWU கிளை தலைவர் தோழர் J. மணி தலைமை தாங்கினார். 

முதல் நிகழ்வாக, புதிய கொடி கம்பத்தில், தோழர் D. சிவகுமார், CLR சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். தோழர் A . பெரியசாமி, CLR அஞ்சலியுறை வழங்கினார். கிளை செயலர் தோழர் R . ஏழுமலை, CLR  அனைவரையும் வரவேற்றார். TNTCWU மாவட்ட உதவி தலைவர் தோழர் P . செல்வம், புதிய தகவல் பலகையை திறந்து வைத்தார். 

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் A . சார்லஸ் பிரேம் குமார் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . சண்முகம், P . செல்வம், TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், BSNLEU மேட்டூர் கிளை செயலர் தோழர் M . கோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் J. மணி, P. பச்சமுத்து, A. பெரியசாமி ஆகியோர் முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றியபின், புதிய கிளை செயலர் தோழர் P . பச்சமுத்து நன்றி கூறி, மாநாட்டை நிறைவு செய்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்