Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, March 24, 2017

TNTCWU கிளை மாநாடு - ராசிபுரம்



TNTCWU ராசிபுரம்  கிளையின் மாநாடு, 21.03.2017 அன்று நாமகிரிபேட்டையில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் ஆறுமுகம், தலைமை தாங்கினார். தோழர் 
P. M . ராஜேந்திரன், வரவேற்புரை வழங்க, தோழர் செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார்.

TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU ராசிபுரம் கிளை செயலர் தோழர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சிறப்புரை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் கந்தசாமி, தலைவராகவும், தோழர் விஜயகுமார் செயலராகவும், தோழர் துரைசாமி, பொருளாளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் கணேசன், நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்