Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, November 27, 2016

செல் கோபுரம் காத்திட - மாலை நேர தர்ணா



BSNL நிறுவனத்தின் 65000 செல் கோபுரங்களைப் பிரித்து, தனி துணை நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து FORUM சார்பாக சேலத்தில், 25.11.2016 அன்று "மாலை நேர தர்ணா" நடைபெற்றது. 

BSNLEU, SNEA, AIBSNLEA சங்கங்கள் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, தோழர்கள் விஜயன் (BSNLEU), சம்பத் (SNEA), பார்த்தசாரதி (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர். 

BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, முறைப்படி போராட்டத்தை துவக்கு வைத்தார். NUBSNLWFNTO மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன் வாழ்த்துரை வழங்கினார். 

தோழர் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), V . சண்முகசுந்தரம் (SNEA), S . ஹரிஹரன், (BSNLEU), சேகர் (SNEA), கோவிந்தராஜ் (AIBSNLEA ) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். FORUM அமைப்பின் கன்வீனரும், BSNLEU சேலம் மாவட்ட செயலுருமான தோழர் E . கோபால், கண்டன பேருரை வழங்கினார். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, தோழர் P . தங்கராஜ், (BSNLEU ) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்