Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, October 23, 2016

இரும்பாலை கிளை மாநாடு



இரும்பாலை கிளையின் 8வது மாநாடு இரும்பாலையில், 17.10.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. தோழர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தோழர் ராமசாமி அனைவரையும் வரவேற்றார். 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் தங்கராஜ், வேலு, கிளை செயலர்கள் தோழர்கள் வெங்கடேசன் (மெய்யனுர் OD), இளங்கோவன் (செவ்வை உதவி செயலர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

அடுத்த ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் ஏகமனதாக, தேர்வு செய்யப்பட்டனர்.  அதன்படி, தலைவராக தோழர் ஜெயராமன், செயலராக தோழர் ராமசாமி, பொருளராக தோழர் மூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்க பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நாள் வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்