Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 26, 2016

நாமக்கல் கிளைகள் இணைந்த மாநாடு


நாமக்கல் நகர மற்றும் ஊரக கிளைகள் இணைந்த கிளை மாநாடு, 21.07.2016 அன்று நாமக்கல்லில் சிறப்பாக நடைப்பெற்றது. மாநாட்டிற்கு, கிளை தலைவர்கள் தோழர்கள் V. கோபால், A. அங்குராஜ் கூட்டு தலைமை தாங்கினர். 

நகர கிளை செயலர் தோழர் S . ராமசாமி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி செயலர் தோழர் P . கனகராஜ் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் P . தங்கராஜ், மாவட்ட உதவி செயலர் துவக்க உரை வழங்கினார்.

மாவட்ட செயலர், தோழர் E . கோபால், மாநில உதவி செயலர் 
தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார்கள். 

ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அதன்படி,

நாமக்கல் நகர கிளை

தலைவர்  : தோழர் R. ராஜகோபால், JE
செயலர்    : தோழர் M . பாலசுப்ரமணியம், OS
பொருளர் : தோழர் N . வரதராஜன், TT

நாமக்கல் ஊரக கிளை

தலைவர்    : தோழர் K. செல்வராஜ், JE
செயலர்     : தோழர் R . சின்னசாமி, TT
பொருளர்  : தோழர் V. சந்திரமோகன், TT

உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட உதவி செயலர் தோழர் M. சண்முகம், கிளை செயலர்கள்  தோழர்கள் N. பாலகுமார் (GM அலுவலகம்), M . ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), K . ராஜன், (திருச்செங்கோடு ஊரகம்) ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில், சுமார் 70 தோழர்கள் பங்கேற்றனர். 

தோழர் ரவிமணி, நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார். புதியதாக, தேர்ந்தெடுக்க பட்ட நிர்வாகிகளுக்கு, மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். அவர்களின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்