Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, October 3, 2015

BSNL CCWF அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் துவங்கியது


Image result for BSNLCCWF ALL INDIA CONFERENCE


BSNL CCWF சங்கத்தின் 3வது அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் நாகர் கோவில் நகரில் துவங்கியது. முதல் நிகழ்வாக தேசியக்  கொடியை BSNLEU புரவலரும், BSNL CCWF அகில இந்திய தலைவருமான 
தோழர் V .A .N . நம்பூதிரி ஏற்றி வைக்க, விண்ணதிரும் கோஷங்கலுக்கிடையே சங்கக்  கொடியை தோழர் தபஸ் கோஷ் அகில இந்திய பொது செயலர், BSNL CCWF ஏற்றி வைத்தார். 

தோழர் நம்பூதிரி தலைமை தாங்க, வரவேற்பு குழு தலைவர் 
தோழர்  A . V . பெல்லார்மின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் வரவேற்றார். 

தோழர் A .K .பத்மநாபன், அகில இந்திய தலைவர், CITU மாநாட்டை துவக்கி வைத்தார். BSNLEU அகில இந்திய பொது செயலர் தோழர் 
P . அபிமன்யூ , துணை தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, AIBDPA துணை தலைவர் தோழர் மோகன் தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்கள். 

சிறப்பான ஒரு பேரணி நடை பெற்றது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்  

துவக்க நிகழ்வுகள் காண இங்கே சொடுக்கவும் 

பேரணி காட்சிகள் காண இங்கே சொடுக்கவும்