2004 முதல் அனைத்து அதிகாரிகள், ஊழியர் சங்கங்களின் இணைந்த மேடையை தலைமை ஏற்று நடத்தி கொண்டிருந்த நமது சங்கத்தின் புரவலர் தோழர் V .A .N . நம்பூதிரி அவர்கள் 25.05.2015 அன்று புது டெல்லியில் கௌரவிக்கப்பட்டார்.
12 ஆண்டுகளாக, பல பெயர்களில் மாற்றப்பட்ட, இந்த இணைந்த மேடையை, கன்வீனராக இருந்து திறம்பட வழி நடத்திய, நமது தலைவர், சொந்த காரணங்களுக்காக பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க கோரியதை FORUM தலைவர்கள் ஏற்று கொண்டனர்.
நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு புதிய கன்வீனராக நியமிக்கப்பட்டுள்ளார். 25.05.2015 அன்று நடைபெற்ற எளிய விழாவில் (FORUM கூட்டத்தில்) அனைத்து சங்க தலைவர்களும் கலந்து கொண்டு தோழர் நம்பூதிரியை பாராட்டி, கௌரவித்தனர்.
நமது தலைவருக்கு சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்.