Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 25, 2020

நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் - சேலம்


AUAB போராட்ட அறைகூவலுக்கிணங்க, நாடு முழுவதிலும், 24.02.2020 அன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நமது சேலம் மாவட்டத்தில், PGM அலுவலகத்தில் போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் S . ஹரிஹரன், (BSNLEU), N . சந்திரசேகர் (SNEA) கூட்டு தலைமை தாங்கினர்.

போராட்டத்தை முறைப்படி, SNEA மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் R . மனோகரன், துவக்கிவைத்து, துவக்கவுரை வழங்கினார். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார். 

AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் R . சண்முகசுந்தரம், SNEA மாவட்ட பொருளர் தோழர் P . பொன்ராஜ், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.  TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

SNEA மாவட்ட செயலர் தோழர் G. சேகர், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் போராட்ட பேருரை வழங்கினார்கள். BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, நன்றி கூறி, போராட்டத்தை முடித்து வைத்தார். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து 140 தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் AUAB சேலம் மாவட்ட கூட்டமைப்பு சார்பாக, நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU