Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, October 17, 2019

உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு!


CMD BSNLஐ சந்தித்த பின், 18.10.2019 அன்று நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைக்க AUAB முடிவு


AUAB தலைவர்கள் மற்றும் CMD BSNL இடையேயான சந்திப்பு இன்று (17.10.2019), மாலை 3 மணிக்கு நடைபெற்றது.  DIRECTOR (HR) மற்றும் DIRECTOR (CM) ஆகியோரும் உடன் இருந்தனர்.  23.10.2019 அன்று ஊதியம் பட்டுவாடா நடைபெறும் என CMD BSNLஉறுதி அளித்தார்.  மேலும், இன்னும் ஒரு வார காலத்திற்குள்  BSNLன் புத்தாக்க திட்டம் தொடர்பாக, மத்திய அமைச்சரவை முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  18.10.2019 அன்று நடத்துவதாக திட்டமிட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். 

அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்ற AUAB தலைவர்கள், அந்தக் கூட்டம் முடிந்தவுடன், தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு செய்தனர்.  

நிலைமையை பரிசீலித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பொருத்தமான முடிவுகள் எடுக்க, AUABயின் அடுத்தக் கூட்டம் 30.10.2019 அன்று நடைபெறும் என  முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்கள் சம்பளமும் விரைந்து பட்டுவாடா செய்ய, நடவடிக்கை எடுக்க, நிர்வாகத்துடனான கூட்டத்தில்,  உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக காலையில், 

இன்று, 17.10.2019 காலை 10:00 மணிக்கு AUAB மற்றும் BSNL Management இடையே ஒரு கூட்டம் நடைபெற்றது. நிர்வாக தரப்பில் இருந்து, திரு. அரவிந்த் வாட்னெர்கர்,Director (HR), திரு. ஸ்ரஷீத்லா பிரசாத், Director(CM) மற்றும் திரு. ஏ.எம். குப்தா, GM (SR), கலந்து கொண்டனர். 

AUAB தரப்பில் இருந்து, BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BSNLMS, SNATTA, ATM BSNL, BSNL OA மற்றும் TOA BSNL ஆகியவற்றின் பொதுச் செயலாளர் / பிரதிநிதி கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், 18-10-2019 உண்ணாவிரதம் போராட்டத்தின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. 

இந்த மாதம் 23 ஆம் தேதி BSNL ன் புத்தாக்கம் குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும் என்று நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. BSNLன் புத்தாக்கம் குறித்து அமைச்சரவையால் அறிவிக்கப்பட்டவுடன், வங்கிகள் BSNL நிறுவனத்திற்கு கடன் வழங்க முன்வருவார்கள் என்றும், இது BSNL ன் மறுமலர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

AUAB இன் பிரதிநிதிகள் 2019 செப்டம்பர், சம்பளத்தை வழங்காதது குறித்து மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், சேவையின் தரத்தை மேம்படுத்துதல், செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் வருவாய் வசூலை அதிகரித்தல் தொடர்பான பிரச்சினைகளையும் அவர்கள் எழுப்பினர். 

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்காக கார்ப்பரேட் அலுவலகம் வழங்கிய கடிதங்கள், அத்துடன் அவர்களின் ஊதியம் வழங்கப்படாதது மற்றும் பராமரிப்பு பணிகளை மோசமாக பாதிக்கின்றன என்று நமது தலைவர்கள் நிர்வாகத்தை கடுமையாக சாடினர்.  

23.10.2019 அன்று செப்டம்பர் சம்பளம் வழங்கப்படும் என்று மேனேஜ்மென்ட் நிர்வாக தரப்பு உறுதியளித்ததுடன், உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு கோரியது. குறைந்தபட்சம் 21.10.2019 க்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று AUAB பிரதிநிதிகள் தெரிவித்தனர். 
இதற்கிடையில், மாலை 03:00 மணிக்கு CMD, AUAB ஐ சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது, எனவே கூட்டம் மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்