Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 20, 2019

ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக மாலை நேர தர்ணா!


ஒப்பந்த ஊழியர் சம்பளப் பிரச்சினை தீராத பிரச்சனையாக, கடந்த ஒரு வருடமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், சுமார் 30% ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என வேறு மோசமான உத்தரவு வந்துள்ளது. 

ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தியும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும்,  18.06.2019 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில், BSNLEU - TNTCWU சங்கங்கள் சார்பாக மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. 

போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), L . செல்வராஜ் (TNTCWU) கூட்டு தலைமை தாங்கினர். கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய பின், TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர், போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட உதவி செயலர்கள் தோழர் S . ஹரிஹரன், M . சண்முகம், S . ராமசாமி கருத்துரை வழங்கினார்கள்.

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் P . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் (சுமார் 30 பெண்கள் உட்பட) திரளாக கலந்து கொண்டனர். BSNLEU சேலம் மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி, போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர்