Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 16, 2018

சேலம் மாவட்ட AUAB பேரணி!


மத்திய AUAB கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க, சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக, 14.11.2018 அன்று சேலத்தில் சக்திமிக்க பேரணி நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மாலை 4.00 மணி முதல் தோழர்கள் திரள துவங்கினர். 

மாலை 5.00 மணிக்கு துவங்கிய பேரணிக்கு தோழர் M. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA தலைமை தாங்கினார். SNEA மத்திய குழு உறுப்பினர் தோழர் M. R. தியாகராஜன், DGM(CM) பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவள்ளுவர் சிலை வழியாக, பேரணி MAIN தொலைபேசி நிலையம் வந்தடைந்தது. 

பின்னர் அங்கு நடைபெற்ற, கோரிக்கை விளக்க கூட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன், (BSNLEU), N. சந்திரசேகரன், (SNEA) கூட்டு தலைமை தாங்கினர். AIBSNLEA மாநில சங்க ஆலோசகர் தோழர் V. சண்முகசுந்தரம் துவக்கவுரை வழங்கினார். 

தோழர்கள் T .பழனி (AIBDPA), P .ராமலிங்கம் (AIBSNLPWA), M. செல்வம் (TNTCWU) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

தோழர்கள் M . R .தியாகராஜன், SNEA CWC உறுப்பினர், M . சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, R .மனோகரன், மாவட்ட செயலர், SNEA, E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து, 400க்கும் மேற்பட்ட தோழர்கள், (சுமார் 100 பெண்கள்),  இந்த மாபெரும் இயக்கத்தில் கலந்து கொண்டனர். பேரணி மற்றும் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு, BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், AUAB கூட்டமைப்பு சார்பாக நன்றி கூறினார். 

மாவட்டம் முழுவதும் திரளான ஊழியர்கள், அதிகாரிகளை திரட்டிய அனைத்து சங்கங்களின் கிளை சங்கங்களையும் மாவட்ட கூட்டமைப்பு சார்பாக பாராட்டுகிறோம். 


வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU